3 C
New York
Thursday, February 12, 2026

ரஷ்ய இராஜதந்திரிகளை சுவிசை விட்டு வெளியேற்ற கோருகிறார் முன்னாள் புலனாய்வு தலைவர்

சுவிட்சர்லாந்தில், இராஜதந்திரி என்ற போர்வையில் செயற்பட்ட மற்றொரு ரஷ்ய உளவாளி சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை வாங்க முற்பட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடைமுறைகளை இறுக்கமாக்கி, ரஷ்ய இராஜதந்திரிகளை முன்னெச்சரிக்கையாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, சுவிட்சர்லாந்தின் முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் பீட்டர் ரெக்லி, வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும், சுவிட்சர்லாந்திற்கு எதிராகவும் கலப்புப் போரை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஆச்சரியமளிப்பதாக இல்லை. முகவர்களை அனுப்பி வைத்து, பின்னர் அவர்களை வெளியேற்றுவது புலனாய்வுத்துறையின் அன்றாட வழக்கம்.அந்த நடைமுறை எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

ஒரு முகவர் கண்டுபிடிக்கப்பட்டால், அவரை வெளியேற்றும்படி, சம்பந்தப்பட்ட நாட்டின் தூதுவர் கேட்கப்படுகிறார். இருப்பினும், இந்த விடயத்தில் அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், வேறு யாராவது அதை அவரது இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ரஷ்யாவின் இந்தப் போர் எமது நாட்டில் நிறுத்தப்படாது என்பதை சுவிட்சர்லாந்து அறிந்திருக்க வேண்டும்.“ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் –  20min

Related Articles

Latest Articles