அப்பர் வலாய்ஸுக்கும் டிசினோவுக்கும் (Upper Valais and Ticino) இடையிலான நுபெனென் கணவாய் (Nufenen Pass ) வீதியில், நேற்றுப் பிற்பகல் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, போக்குவரத்து தடைப்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை இரு திசைகளிலும் வீதி மூடப்பட்டிருக்கும் என, டிசிஎஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவினால் வாகனங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என வலாய்ஸ் கன்டோன் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் மூலம் – The swiss times