25.6 C
New York
Tuesday, June 24, 2025

சூரிச்சில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் இருமல்.

சூரிச்சில் பாடசாலை மாணவர்களிடையே தொடர் இருமல்  தொற்று அதிகரித்து வருகிறது.

கோடை விடுமுறைக்கு  முன்னதாக, சூரிச் பாடசாலைகளில், இந்த நோய்ப் பரவல் கடுமையானதாக காணப்படுகிறது.

சூரிச் பொதுப் பாடசாலை  அலுவலகம் தற்போது பாடசாலைகளில் தொடர் இருமல்  தொற்று அதிகரிப்பதைக் கவனித்து வருவதுடன் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பாடசாலை மருத்துவ சேவை தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்கள் உடனடியாக பாடசாலையில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.

இருமல் அறிகுறிகளுடன் உள்ள குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பரிசோதனை செய்து முடிவு கிடைக்கும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.

இருமல் தொடர்பான நேர்மறை சோதனை முடிவு கிடைப்பவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படும்.

நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை தொடங்கிய ஐந்து நாட்களுக்குப் பின்னரே பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 நோய்த்தொற்றின் ஆபத்து இருமல் தொடங்கியதிலிருந்து 21 நாட்கள் நீடிக்கும்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles