சூரிச் விமான நிலையத்தில் 47 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அல்பேனியாவில் இருந்து போதைப்பொருள் அடங்கிய பெட்டியை சுவிட்சர்லாந்திற்கு கடத்த முயன்ற போதே, சுங்க பிரிவினரின் சோதனையின் போது, சிக்கியுள்ளது.
இதனைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 தொடக்கம், 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – zueritoday