29 C
New York
Sunday, June 22, 2025

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை பெரும் வீழ்ச்சி.

சுவிற்சர்லாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 12,500 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மட்டுமே எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50,000  வரையாக, பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு இறுதி வரை இந்த போக்கு நிலையாக இருந்தால், ஒழுங்கற்ற முறையில் நாட்டிற்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.

ஒழுங்கற்ற இடம்பெயர்வுக்கான மாதாந்த புள்ளிவிவரங்கள் முந்தைய ஆண்டுகளை விட தற்போது பாதியாக குறைந்துள்ளதற்கு ஒரு காரணம் ஐரோப்பாவில், தப்பிக்கும் வழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.

மத்திய மத்திய தரைக்கடல் பாதை மற்றும் மேற்கு பால்கன் பாதை வழியாக மிகக் குறைவான மக்களே பயணிக்கின்றனர்.

இதன் விளைவாக, இனி ஒஸ்ரிய-சுவிஸ் எல்லையில் ஒழுங்கற்ற இடம்பெயர்வு எதுவும் இருக்காது என்று இடம்பெயர்வுக்கான அரசாங்க செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles