Friborg கன்டோனில் நேற்று மாலை SBB ரயில் கடுமையான புயலில் சிக்கி சேதமடைந்துள்ளது.
மின்கம்பி அறுந்து விழுந்து ரயில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான சூறைக்காற்றுடன் கூடிய மழையினால், Fribourg மற்றும் Romont இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று மாலை 6 மணியளவில் இந்தப் பாதையில் ரயில் பயணித்த போது, பலத்த சேதமடைந்தது, சிதைவுகள் ஏற்பட்டு ரயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேல்நிலைப் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போக்குவரத்து தடைபட்டிருப்பதை SBB உறுதிசெய்துடன் மாற்றுப் பேருந்துகளை வழங்கியுள்ளது.
அந்த ரயிலில் 100 பயணிகள் இருந்தனர்.
அதேவேளை நேற்று மாலை மேற்கு சுவிற்சர்லாந்தைக் கடந்து சென்ற 4ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்தும், இடிமின்னல் தாக்கியும் பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடும் மழையினால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மூலம்- 20min