11.9 C
New York
Monday, March 30, 2026

சூரிச் முன்னாள் கவுன்சிலருக்கு 9 மாத சிறைத்தண்டனை.

சுவிஸ் SVP கட்சியின் முன்னாள் கன்டோனல் கவுன்சிலர் Bernhard Diethelm இற்கு சூரிச் உயர் நீதிமன்றம் இன்று ஒன்பது மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

41 வயதான அவர்,  பெண் ஒருவரை தாக்கி கழுத்தை நெரித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

அதற்காக அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றம் முன்னாள் அரசியல்வாதிக்கு 1,000 பிராங்குகள் அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பு இன்னும் முடிவாகவில்லை.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles