சூரிச் நகரில் ரைகர் நுளம்பு பரவுவதாக தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரிச் பிரதான ரயில் நிலையத்திற்குப் பின்னால் உள்ள நீண்ட தூர பேருந்து நிலையத்திற்கு வெளியே முட்டை மற்றும் ரைகர் நுளம்புகள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சூரிச்சில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டிலேயே இந்த வகை நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அதேவேளை, மாவட்டம் 5 இல் உள்ள Hafnerstrasse இல் ஒரு பொறியிலும், Industrie மற்றும் Wipkingen மாவட்டங்களிலும் இந்த வகை நுளம்பின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூலம் -Zueritoday