23.7 C
New York
Sunday, May 17, 2026

புகலிடக் கோரிக்கையாளருக்கு புதிய கொடுப்பனவு அட்டை.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான புதிய வகை கொடுப்பனவு அட்டைகளை வழங்குவதற்கு சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இத்தகைய பணம் செலுத்தும் முறையை நாடு முழுவதும் எப்படி அறிமுகப்படுத்தலாம் என பிரதிநிதிகள் சபை ஆராய்கிறது.

செனட் ஏற்கனவே இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

பிரதிநிதிகள் சபையின் அரசியல் நிறுவனக் குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணக் கொடுப்பனவு அட்டைகள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சுவிட்சர்லாந்தை குறைவான கவர்ச்சியான இடமாக மாற்றும் நோக்கம் கொண்டவை.

இதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு மாற்றக் கூடிய பணத்தை பெற முடியாது. உள்நாட்டிலேயே செலவிட முடியும்.

மூலம் –swissinfo

Related Articles

Latest Articles