36.1 C
New York
Monday, June 23, 2025

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவருக்கு 12,500 பிராங் இழப்பீடு.

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட ஒருவர் முதன்முறையாக,  நிதி இழப்பீட்டைப் பெற்றுள்ளார்.

அவருக்கு 12,500 பிராங் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதிப்புக்கு முதல் இழப்பீட்டுத் தொகையை வழங்க  ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இழப்பீட்டைப் பெறுவதற்கு வலி, போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள், வருமான இழப்பை எதிர்கொண்டதாக நிரூபிக்க வேண்டும்.

உள்துறை அமைச்சிற்கு  இதுவரை இழப்பீடு தொடர்பான 320 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அண்மையில் 50 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன, அவற்றில் 30 விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.

இழப்பீடு வழங்கப்படுவதற்கு, உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தடுப்பூசிக்கும் இடையே காரணமான தொடர்பு இருக்க வேண்டும்.

2020 டிசம்பர் மாதம், சுவிஸ் வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு அனைவருக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்தது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles