சுவிஸ் குடிமக்கள் தங்கள் சொந்த வழிகளைப் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு பெடரல் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும், சாத்தியமானதாகவும் பாதுகாப்பாகவும் தோன்றினால் மட்டுமே அந்த முடிவை எடுக்குமாறு, சுவிஸ் வெளியுறவு அமைச்சு நேற்று X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஈரானுக்கு பயணம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் செயற்பட்டு வருகிறது.
அங்குள்ள அனைத்து சுவிஸ் பிரதிநிதிகளும் பாதுகாப்பு மற்றும் நெருக்கடி ஏற்பாடுகளை கொண்டிருக்கின்றனர். அவை தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
மூலம் – Zueritoday