-5.7 C
New York
Sunday, December 28, 2025

ஈரானை விட்டு வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவிப்பு!

சுவிஸ் குடிமக்கள் தங்கள் சொந்த வழிகளைப் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு பெடரல்  வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும், சாத்தியமானதாகவும் பாதுகாப்பாகவும் தோன்றினால் மட்டுமே அந்த முடிவை எடுக்குமாறு, சுவிஸ் வெளியுறவு அமைச்சு நேற்று X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஈரானுக்கு பயணம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் செயற்பட்டு வருகிறது.

அங்குள்ள அனைத்து சுவிஸ் பிரதிநிதிகளும் பாதுகாப்பு மற்றும் நெருக்கடி ஏற்பாடுகளை கொண்டிருக்கின்றனர். அவை தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles