Schwamendingen இல் உள்ள Migrol பெட்ரோல் நிலையத்தில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி ஊழியரிடம் இருந்து ஒருவர் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் கொள்ளையடித்த பல நூறு பிராங்குகளுடன் கால்நடையாகத் தப்பி ஓடியுள்ளார்.
அவர் அரைகுறையாக ஜெர்மன் மொழியில் பேசினார் என்றும், 165 தொடக்கம் 175 சென்டி மீற்றர் வரை உயரமும், மெல்லிய உடலமைப்பையும் கொண்டவர் என்றும் சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- zueritoday