Münster இல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.
நேற்றுக்காலை 8 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 49 வயதான இத்தாலியர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போது, Matterhorn -Gotthard Bahn ரயில் மோதியுள்ளது.
இச்சம்பவம் குறித்து Sust விசாரணை நடத்தி வருகிறது.
மூலம்- 20min