36.1 C
New York
Monday, June 23, 2025

100 இற்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் கைது.

திருட்டுகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும் 34 வயதான சுவிஸ் நபரை Lucerne பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர் 100இற்கும் மேற்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பல மாகாணங்களில் திருட்டு மற்றும் சொத்து சேதங்களை செய்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ

அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம்களில் இவர் 80 ஆயிரம் பிராங்குகள் வரை திருடியுள்ளார்.

200,000 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles