Solothurn விளக்கமறியல் சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விளக்கமறியல் சிறைக்கூடம் ஒன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளது.
இதில் மூன்றாவது தரப்பின் தலையீடுகள் ஏதும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தை அடுத்து, ஒரு கைதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min