சூரிச் விமான நிலையத்தில் 20 கிலோ கிராம் கெட்டமைன் போதைப் பொருளுடன் 23 வயதுடைய பெண்ணை சூரிச் கன்டோனல் பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் இருந்து பாரிஸ் நோக்கி அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரிச் விமான நிலையத்தில் நேற்று அவரது சூட்கேஸில் இருந்து போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றினர்.
அவர் சட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம் -Zueritoday