Bülach இல் Quarzstrasse இல் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அடித்தளத்தில் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
புகையினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடியிருப்பாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கட்டடத்தில் வசிப்பவர்கள் அனைவரும் அதிகாலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீவிபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.
மூலம்- zueritoday