கிராண்ட் கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, Basel வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் Eric Weber பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான வாக்களிப்பு முறைகேடுகள் இடம்பெறலாம் என, அரச அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பொலிசார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று Basel அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிரான்ட் கவுன்சில் உறுப்பினரான, Eric Weber இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
கிராண்ட் கவுன்சிலின் பிற்பகல் அமர்வில் Eric Weber கலந்து கொண்டார்.
தாம் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
2014 டிசம்பர் இல், தேர்தல் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக Eric Weber க்கு 360 மணிநேர சமூக சேவை செய்ய வேண்டும் என்று Basel குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம் -Zueritoday