17.1 C
New York
Wednesday, September 10, 2025

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து- 4 பேர் படுகாயம்.

Pfäffikon இல் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 3 ஆவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீ பரவியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 34 வயதுடைய ஆண், 43 வயதுடைய பெண், 14 வயதுடைய பெண் குழந்தை, 11 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து  அருகில் உள்ள  குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles