அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, சுவிட்சர்லாந்தில் மாறுபட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.
இங்குள்ள மக்கள், ட்ரம்பின் வருகையின் விளைவுகளைப் பற்றி பலர் பயப்படுகிறார்கள்.
சுவிஸ் ஜனாதிபதி வயோலா அம்ஹெர்ட் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான விஞ்ஞான மற்றும் பொருளாதார உறவுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை ட்ரம்ப் தோற்கடித்தது, உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது போலவே சுவிட்சர்லாந்திலும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் அரசியல்வாதிகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி, ஜனநாயகம், அமைதி, பெண்கள் உரிமைகள் மற்றும் காலநிலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பசுமைக் கட்சியின் துணைத்தவர் நிக்கோலஸ் வால்டர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவினதும், சமூக ஜனநாயகக் கட்சியினதும் உறுப்பினரான ஃபேபியன் மோலினா, “பலதரப்பு, காலநிலை பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்பது, உலகிற்கு பேரழிவு தரும் செய்தி.” என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, ட்ரம்பின் வெற்றிக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
மூலம்- swissinfo