அதிக ஊதியம் மற்றும் பணவீக்கம் வீழ்ச்சி ஆகிய காரணங்களால், அடுத்த ஆண்டில் சுவிஸ் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Investment Office of UBS Global Wealth Management (UBS CIO GWM) நிறுவனத்தினால், வியாழக்கிழமை வெளியிட்ட சம்பளக் கணக்கெடுப்பின் படி, 345 சுவிஸ் நிறுவனங்கள் 2025 இல் சராசரியாக 1.4% சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
சம்பள அதிகரிப்பு குறைவாகவே இருந்தாலும், பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் சரிவு காரணமாக உண்மையான சம்பள அதிகரிப்பு அதிகமாக இருக்கும் என UBS தலைமை பொருளாதார நிபுணர் டானியல் கால்ட் தெரிவித்துள்ளார்.
UBS 2025 ஆம் ஆண்டிற்கான பணவீக்கம் 0.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சம்பள அதிகரிப்பு, 0.7% உயரக் கூடும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மற்றும் எரிசக்தி, பயன்பாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் துறையில் உள்ள பணியாளர்கள் அதிகபட்ச சம்பள உயர்வாக சுமார் 2% ஐ எதிர்பார்க்கலாம்.
இரசாயன மற்றும் மருந்துத் துறை 1.7% சம்பள அதிகரிப்பை பின்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடகத்துறை குறைந்த சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.
கட்டிடப் பொருட்கள் தொழில் மற்றும் சில்லறை வர்த்தகத்துடன் கடைசி இடத்தில், 1% அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.
எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் 0.7% என்பது உண்மையான சம்பள அதிகரிப்பாக இருக்கும் என்பதால், வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
மூலம்- Swissinfo