சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு சமூக மற்றும் சமூக-நெறிமுறைப் பிரச்சினைகள் குறித்து வத்திக்கானுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
லூசெர்ன் பல்கலைக்கழகம் மற்றும் வத்திக்கானின் தகவல்படி, திருத்தந்தை பதினான்காம் லியோ, பீட்டர் ஜி. கிர்ஷ்ஷ்லாகரை ‘ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் துறை’யின் ஆலோசகராக நியமித்துள்ளார்.
அமைதி, நீதி, சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்துறைக்கு, மொத்தம் 12 புதிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிர்ஷ்ஷ்லாகர், லூசெர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக நெறிமுறைகள் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
மேலும் அவர் ETH சூரிச்சில் வருகைப் பேராசிரியராகவும், மனிதரல்லாத உயிரித் தொழில்நுட்பத்திற்கான சுவிஸ் கூட்டாட்சி நெறிமுறைகள் குழுவின் தலைவராகவும், லூசெர்ன் நகரின் ‘ஸ்மார்ட் லூசெர்ன்’ நெறிமுறைகள் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
மூலம்- swissinfo


