12.3 C
New York
Wednesday, April 22, 2026

வீதியோரமாக சென்ற பாதசாரிகளை மோதிய கார்.

பேர்னில் உள்ள Konolfingen இல் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் மோதி பாதசாரியான ஒருவரும் குழந்தையும் காயம் அடைந்தனர்.

வீதியோரமாக நடந்து சென்றவர்கள் மீதே கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் குழந்தை மோசமான காயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஆண் ஒருவர் காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரும் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு பாதசாரி காயமின்றி தப்பியுள்ளார்.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles