Basel-Stadt இல் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.40 மணியளவில், ஒரு இ-ஸ்கூட்டர் ஓட்டுநர் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளான அவருக்கு அதிக இரத்தம் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் இ-ஸ்கூட்டர் விபத்துக்கள் இருபது மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
மூலம்- 20min