18.2 C
New York
Thursday, September 11, 2025

மிளகு தூளைத் தெளித்து விட்டு பெண்ணின் கைப்பை அபகரிப்பு.

ஷென்கான் லூயிஸில் பெண் ஒருவரின் முகத்தில் மிளகுத் தூளைத் தெளித்து விட்டு அவரது கைப்பையைத் திருடிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

66 வயது பெண்ணைத் தாக்கி விட்டு 21 வயது நபர் இந்த வழிப்பறியை மேற்கொண்டிருந்தார்.

தப்பிச் சென்ற குற்றவாளியை அடையாளம் கண்டு  லூசெர்ன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்த 21 வயது நபர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles