-0.2 C
New York
Tuesday, December 30, 2025

லூசெர்ன்  திருவிழாவில் தவறவிடப்படும் குழந்தைகளை கண்டுபிடிக்க விசேட காப்பு.

லூசெர்ன்  திருவிழாவில் (lucerne carnival) தவற விடப்படும் குழந்தைகளை விரைவாக பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக, காவல்துறை அதிகாரிகள் மணிக்கட்டு பட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இவற்றை குழந்தைகளுடன் வருபவர்கள் இலவசமாகப் பெறலாம்.

இதற்கென, லூசெர்ன் நகரில்  27 ஆம் திகதி தொடக்கம்,  மார்ச் 3ஆம் திகதி வரை  Bahnhofplatz  உள்ள வளைவில் மையத்தை இயக்கும் என்று லூசெர்ன் காவல்துறை அறிவித்துள்ளது.

இங்கு மணிக்கட்டு பட்டைகளை காலை 11:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை இலவசமாகப் பெறலாம்.

காணாமல் போன குழந்தைகள் விரைவில் தங்கள் பராமரிப்பாளர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதை உறுதி செய்வதற்காக இந்த வளையல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles