3.3 C
New York
Wednesday, February 11, 2026

கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் மீட்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கி௨படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனை கடத்திச் சென்ற மூவரை கைது செய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையிலிருந்து படகு மூலம் சமீப காலமாக தமிழகத்திற்குள் அதிக அளவு தங்கம் கடத்தி செல்லப்படுகின்றது.

இந்த நிலையில் இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், இந்திய கடலோர கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Latest Articles