27.8 C
New York
Thursday, August 20, 2026

Solothurn சிறையில் இருந்த 4 கைதிகள் தப்பியோட்டம்.

Solothurn இல் விசாரணைக் கைதிகளாக இருந்த நான்கு பேர்,  ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Solothurn தடுப்புச் சிறையில் இருந்த நான்கு கைதிகள், வழக்கமாக தங்கள் அறைகளுக்கு வெளியே உள்ள பொதுவான பகுதிகளில் தங்கியிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய நான்கு பேரும் சொத்துக் குற்றங்களுக்காக, குறிப்பாக கொள்ளைக்காக ஆரம்பகால தண்டனையை அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களைக் கைது செய்வதற்குத் தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டை இதுவரை வெற்றியளிக்கவில்லை.

தப்பிச் சென்ற பாதை மற்றும் சூழ்நிலைகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிறைச்சாலை சேவைகள் துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள காரணமாக கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles