19.4 C
New York
Friday, May 15, 2026

தொழிற்சாலை கட்டடம் தீக்கிரை- இருவர் கைது?

ஓல்டனில் வெறுமையாக இருந்த  ஒரு தொழில்துறை கட்டடம் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதிகாலை 2:50 மணியளவில், ஓல்டனில் தொழில்நுறைப் பகுதியில்  உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கட்டடத்தில் விரைவாக முழுமையாக தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி தீயை அணைக்க முடிந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சோலோதர்ன் கன்டோனல் பொலிஸ் நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு பேர் அந்த இடத்தில் இருந்தனர்; அவர்கள் விசாரணைக்காக பொலிஸ். நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சோலோதர்ன் கன்டோன் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles