ஈரானுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருப்பதாக, அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அறிவித்துள்ளது என வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜெனிபர் ஜேக்கப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து, அமெரிக்கா ஊழியர்களை திரும்பப் பெறுவதற்கு இதுவே காரணம் என்று ஜெனிபர் ஜேக்கப்ஸ் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பதிலுக்கு ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு இஸ்ரேலின் அணுசக்தி மையங்களை தாக்கப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.