வெர்னியர் (GE) நகராட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவா நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முடிவை மேல்முறையீட்டாளர்கள் வரவேற்றுள்ளதுடன், இது ஜனநாயகத்தை அற்பமாகக் கருதக்கூடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
வெர்னியர் மேயர் கியான்-ரெட்டோ அக்ரமண்ட் (பிஎல்ஆர்) இந்த முடிவை ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
புதிய தேர்தல்களை நடத்துவது குறித்து, மாநில கவுன்சில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இது ஆண்டு இறுதிக்குள் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்,.
நவம்பர் 30 ஆம் திகதிக்குள் இங்கு புதிய தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.