சென் காலன் கன்டோனில், முர்க் ஏரிக்கு அருகிலுள்ள ஒரு அல்பைன் குடிசை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்றுக் காலை 10:45 மணிக்கு சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முர்க் பள்ளத்தாக்கின் பின்புறத்தில் குடிசை அமைந்திருந்ததால், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உபகரணங்களை இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
அவசர சேவைகள் வந்து சேர்வதற்கிடையில், கட்டடம் முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது.