7.4 C
New York
Sunday, April 5, 2026

புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்.

பெல்கிரேடில் இருந்து சூரிச் செல்லும் சுவிஸ் விமானத்தில் ( LX1413) புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று காலை 9.25 மணியளவில் புறப்பட்ட ஏர்பஸ் 220-300 விமானத்தின் கொக்பிட்டில் ஏற்பட்ட தவறுகள் மற்றும்  கபினின் பின்புறத்தில் எழுந்த புகையை அடுத்து,  அருகிலுள்ள பொருத்தமான விமான நிலையத்தில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து விமானம் ஃப்ரீட்ரிச்ஷாஃபெனுக்கு திருப்பி விடப்பட்டு, காலை 11.20 மணியளவில் தரையிறங்கியுள்ளதாக சுவிஸ் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது.

விமானத்தில் 115 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.

“தரையிறக்கம் சீராக இருந்தது,  விமானிகள் விமானத்தை நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்ற பின்னர் பயணிகள் வழக்கமான படிக்கட்டுகள் வழியாக வெளியேற முடிந்தது.

மருத்துவ பணியாளர்கள் தளத்தில் உள்ளனர், மேலும் பயணிகளை சூரிச்சிற்கு கொண்டு செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று சுவிஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு சுவிஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles