கொசோவர் தீவிரவாத அமைப்பின் சுவிஸ் கிளையின் தலைவர் என்ற சந்தேகத்தின் பேரில், கொசோவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
கொசோவோவில் அந்த அமைப்பின் நிர்வாகத்தில் அவர் தீவிரமாக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தீவிரவாத அமைப்பின் பெயரில், குறிப்பாக ஜெனீவா பகுதியில், மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரின் ஆதரவுடன், புதிய உறுப்பினர்களை ஊக்குவித்தல், நிதியளித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதை சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் (OAG) அறிவித்துள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் “இஸ்லாமிய அரசு” என்ற பயங்கரவாத அமைப்பை இந்த நடவடிக்கைகளால் ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் அதன் கருத்துக்களைப் பரப்புவதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
ஜூலை 2021 முதல் OAG நடத்திய குற்றவியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 36 வயதான கொசோவரும், இரண்டாவது சந்தேக நபரான 33 வயதான சுவிஸ்-வடக்கு மாசிடோனிய இரட்டைக் குடிமகனும் 2022செப்ரெம்பர் 1, ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் தற்போது ஆரம்பகால தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.
மூலம்- swissinfo

