ஜூரா மலைகளில் அதிகரித்து வரும் ஓநாய் தாக்குதல்கள், வௌட் மாகாணத்தில் பதட்டங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து ஒரு விவசாயி மீது மாநில கவுன்சிலர் வௌசிலிஸ் வெனிசெலோஸ் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் “எல்லா பக்கங்களிலிருந்தும் வருகிறார்கள். சமீபத்தில் ஒரு விவசாயி என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார்என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், எனது அணிகளை பாதுகாப்பதும் இதன் நோக்கம்.
நிச்சயமாக இந்தக் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, சில விவசாயிகள் அரசிடமிருந்து இன்னும் உறுதியான நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் சில வரம்புகளை மீறக்கூடாது, என்று அமைச்சர் தொடர்ந்தார்.
ஜூலை மாதத்தில் மட்டும், ஒரு ஓநாய் குறைந்தது 18 கன்றுகள், செம்மறி ஆடுகளைக் கொன்றதாக மாகாணத்தின் சமீபத்திய எண்ணிக்கை தெரிவிக்கிறது.
மூலம்- swissinfo

