சுவர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 2:30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
49 வயதான அந்த நபர், ரீட்ஸ்ட்ராஸ்ஸில், கிரிஸ்ஸெர்ன் (SG) இலிருந்து லுச்சிங்கன் (SG) நோக்கி தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
மருத்துவ காரணங்களுக்காக, அந்த சுவிஸ் நாட்டவர், ஹெர்ரென்வைஸ்ட்ராஸ் சந்திக்கு சற்று முன்னர், தனது காரின் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
வீதியை விட்டு விலகி, வலது பக்கத்தில் இருந்த ஒரு கல்லில் மோதிய பின்னர் கார் உருண்டு, ரயில்வே சுரங்கப்பாதையின் கொன்கிரீட் சுவரில் மோதி நின்றது.
உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், 49 வயதான உள்ளூர்வாசி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மூலம்- 20min.