சூரிச் மாவட்டம் 9 இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நகர பொலிசார் கூறுகின்றனர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு சற்று முன்னர், அல்பிஸ்ரீடன் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சூரிச் நகர பொலிசார் அழைக்கப்பட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே, காயங்களுடன் ஒரு உயிரற்ற பெண்ணை அதிகாரிகள் கண்டனர்.
மற்றொரு பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார். மேலும் விசாரணைக்காக அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி, “குற்றச் செயல்களை நிராகரிக்க முடியாது என்று பொலிசார், தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min

