0.8 C
New York
Monday, December 29, 2025

புகலிட மையத்தின் முன்பாக வன்முறை – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காயம்.

துர்காவ், க்ரூஸ்லிங்கனில் உள்ள பெடரல் புகலிட மையத்தின் முன்பாக வெடித்த வன்முறை மோதல்களில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

புதன்கிழமை இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டோபெலிஸ்ட்ராஸ்ஸில் நடந்த இந்த மோதலுக்கு சரியாக என்ன காரணம், யார் ஈடுபட்டார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பந்தப்பட்டவர்களில் பலர் அருகிலுள்ள புகலிட மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக துர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் மோதலுக்கான காரணங்கள் விசாரணையில் உள்ளன.

பல சிறை வாகனங்கள் பல கைதிகளை ஏற்றிச் சென்றன. மோதலில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பொலிசார் சில பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி தலையில் காயம் அடைந்துள்ளார். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்து மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles