0.8 C
New York
Monday, December 29, 2025

சுவிஸ் தேசிய கவுன்சில் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கையர்.

இலங்கையில் பிறந்த சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பரா ரூமி, சுவிஸ் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பாரம்பரியத்தில் இருந்து வந்த ஒருவர், சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத் தலைவராகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ரூமி இலங்கையில் பிறந்து குழந்தையாக இருந்த போது சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

பயிற்சி பெற்ற தாதி மற்றும் மருத்துவ நிபுணரான அவர், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தனது பணியின் மூலம் அரசியலில் நுழைந்தார்.

இந்த அனுபவம் அவரை 2020 இல் சுவிஸ் சமூக ஜனநாயகக் கட்சியில் (SDP) சேரத் தூண்டியது. அவர் முதலில் சோலோதர்ன் கவுன்சிலில் பணியாற்றினார்.

34 வயதான அவர் நாடாளுமன்றத்தில் சுகாதார சீர்திருத்தங்கள், சமூக சமத்துவம், வெளியுறவுக் கொள்கை, அமைதி முயற்சிகள் மற்றும் மனித உரிமைகளை ஆதரித்துள்ளார்.

ரூமி இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார், இப்போது தேசிய கவுன்சிலின் பிரேசிடியத்தில் தலைமைப் பதவியை வகிக்கும் முதல் நபராகிறார் என்று சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தாதிய ஊழியர்களுக்கான தொழிலாளர் சங்கத்தின் இணைத் தலைவராக இருந்தார் மற்றும் ஒரு தொழிற்கல்வி பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தகவல் தொழில்நுட்ப நிபுணரான முகமது ‘ரூமி’ மொஹிதீன் மற்றும் இஸ்ஃபியா ரூமி ஆகியோரின் மகளான இவர், ஆறு வயதில் தனது பெற்றோருடன் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

மூலம்- sundaytimes

Related Articles

Latest Articles