25.2 C
New York
Wednesday, August 12, 2026

40 கிலோ கோகைனுடன் சிக்கிய கார்.

டிசினோவின் கபோலாகோவில் நேற்று ஒரு காரில் இருந்து 40 கிலோகிராம் கோகைனை டிசினோ எல்லை பொலிசார் கண்டுபிடித்தனர். அந்த வாகனத்தில் இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் போதைப்பொருள் சட்டத்தை கடுமையாக மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இப்போது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் உள்ளது.

53 வயதான இத்தாலியப் பெண்ணும் 53 வயதான செர்பிய ஆணும் A2 மோட்டார் பாதையில் வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, நேற்றுக் காலை 7 மணிக்குப் பிறகு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

Related Articles

Latest Articles