-5 C
New York
Friday, February 13, 2026

தபால் நிலையத்தில் மீண்டும் கொள்ளை.

வெட்டிங்கனில் உள்ள ஒரு தபாலகத்தில், கொள்ளை இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை, மாலை 6:30 மணியளவில், முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத ஒருவர் ஊழியர்களை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

அவர் அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார். பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.

இதே தபாலக கிளையில் நவம்பர் மாதமும் கொள்ளை இடம்பெற்றது.

“பல பொலிஸ் ரோந்து குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்ட போதும், குற்றவாளி தப்பித்து விட்டதாக ஆர்காவ் கன்டோனல் பொலிசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles