வோர்பில் சனிக்கிழமை பிற்பகல் 4:40 மணிக்கு நடந்த விபத்தில் பெண் ஓட்டுநர் உயிரிழந்தார்.
அந்தப் பெண் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ரவுண்டானாவைக் கடந்து, ஒரு தொழிற்சாலை கட்டிடத்தின் சுவரில் மோதினார்.
இறுதியாக அவரது கார் போடெங்காஸ்ஸில் உள்ள ஒரு வயலில் நின்றது.
காரில் இருந்த பயணி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான நிலையில், ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பெர்ன் கன்டோனல் பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவித்தனர்.
மூலம்- 20min

