2.1 C
New York
Thursday, February 12, 2026

ரயில்களில் அதிக கூட்டம்- கட்டுப்படுத்த நடவடிக்கை.

பண்டிகைக் காலத்தில் பெர்னினா பாதையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிரானோ மற்றும் சென் மோரிட்ஸில் உள்ள ரயில்களுக்கான அணுகலை ஒழுங்குபடுத்தவும், தேவைப்பட்டால் அதை கட்டுப்படுத்தவும் ரேடியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, ஒவ்வொரு திசையிலும் 600 புதிய ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெர்னினா பாதையில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் அதிக பயணிகள் கூட்டம் கூடுவதைத் தடுக்க இந்த கேட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு கிலோமீட்டருக்கு பயணிகளின் எண்ணிக்கை 71% அதிகரித்துள்ளது. இந்த பாதையில் ரயில்கள் அதிகமாக நிரம்பியுள்ளதாக மீண்டும் மீண்டும் புகார்கள் வந்ததாக RhB இயக்குனர் தெரிவித்தார்.

டிசம்பர் 26 முதல் ஜனவரி 5 வரை, ஆசன முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு இரண்டு நிலையங்களுக்கான அணுகல் பிரிக்கப்படும்.

ரயிலில் இருந்து வெளியேறுபவர்களுக்கு ஒரு வெளியேறும் நடைபாதை இருக்கும். அத்துடன் RhB ஒவ்வொரு திசையிலும் 600 கூடுதல் ஆசனங்களையும் உருவாக்கி, சேவையில் ஒரு கூடுதல் ரயிலைச் சேர்த்துள்ளது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles