14 C
New York
Friday, May 15, 2026

ஜெர்மன் வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை- 30 ஆயிரம் மில்லியன் யூரோ திருட்டு.

ஜெர்மனியின் கெல்சென்கிர்ச்செனில் உள்ள ஒரு சேமிப்பு வங்கியில் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட சேமிப்பு வங்கியின் பெட்டகத்தில் இருந்த 3000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன, அதில் பணம், நகைகள் மற்றும் தங்கம் என்பன இருந்தன.

3,200 பாதுகாப்புப் பெட்டிகள் உடைக்கப்பட்டதாக ஜெர்மன் பத்திரிகை dpa தெரிவித்துள்ளது. இதனால் 2,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஜெர்மன் குற்றவியல் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொள்ளைகளில் ஒன்றாக இருக்கலாம்.

திங்கள்கிழமை இரவு தீ எச்சரிக்கையை அடுத்து இந்த கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை கிளையின் முன் கோபமடைந்த மக்கள் கூட்டம் கூடியது.

ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, குற்றவாளிகள் ஒரு பார்க்கிங் கராஜ் வழியாக நுழைந்தனர். அவர்களின் பாதை பல கதவுகள் வழியாக ஒரு காப்பக அறைக்குள் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் இறுதியில் பெட்டகத்தை அணுக சுவரில் துளையிட்டுள்ளனர். இதற்காக அவர்களால் சிறப்பு துரப்பணம் பயன்படுத்தப்பட்டது.

சேமிப்பு வங்கி அதன் வலைத்தளத்தில், வாடிக்கையாளர்கள் கிளையை நேரில் பார்வையிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles