சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகள் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
2024 ஆம் ஆண்டில், பகுப்பாய்வு செய்யப்பட்ட 405 உணவு மாதிரிகள் 63% பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்டிருந்தன.
இவற்றில், பத்து மாதிரிகள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்புகளை மீறியதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகாரங்களுக்கான கூட்டாட்சி அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பாதாமி மற்றும் ஸ்ட்ரோபெர்ரிகள் ஆகும். இதில் கப்டன், ஹாலோக்ஸிஃபாப், இப்ரோடியோன் மற்றும் ஸ்பினோசாட் ஆகிய பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் கண்டறியப்பட்டன.
பழங்கள், காய்கறிகள் (கரட், கோவைக்காய் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை), அத்துடன் தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்கள் மாதிரிகள் இந்த பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டன.
மூலம்- swissinfo

