மிருகக்காட்சிசாலைகளில் சிம்பன்சிகளை வைத்திருப்பதற்கு விலங்கு நல அமைப்பான பீட்டா, எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு சுவிட்சர்லாந்தின் கோசாவில் உள்ள வால்டர் மிருகக்காட்சிசாலையில் ஒரு சிம்பன்சி குட்டியை ஈன்றுள்ளதை அடுத்து மிருகக்காட்சிசாலையில் சிம்பன்சிகளை இனப்பெருக்கம் செய்வதை நிறுத்துமாறு பீட்டா அழைப்பு விடுத்துள்ளது.
மிருகக்காட்சிசாலைகளில் பெரிய குரங்குகளை சிறைபிடித்து வைத்திருப்பதை ஒரு மனிதனின் வாழ்நாள் சிறைவாசத்துடன் பீட்டா ஒப்பிடுகிறது. இதன் விளைவாக, விலங்குகள் மீண்டும் மீண்டும் திடீர் மரணங்கள், நடத்தை கோளாறுகள் மற்றும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பீட்டா தெரிவித்துள்ளது.
குட்டி சிம்பன்சி கூட்டத்தை இழுக்கும் ஒரு பொருளாக தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் விலங்கு நல அமைப்பு கூறுகிறது.
மூலம்- swissinfo

