வெளிநாடுகளில் வசிக்கும் சுவிஸ் குடிமக்கள் ஆர்காவ் மாகாணத்தில், மீண்டும் தங்கள் வாக்குரிமைகளைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் இறுதியில், வாக்களிக்க பதிவுசெய்துள்ள வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் குடிமக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 3.1% அதிகரித்துள்ளது.
தற்போது மொத்தம் 12,710 பேர் வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளனர். இந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா அல்லது இத்தாலியில் வசிக்கின்றனர். ஏனையவர்கள் 135 பிற நாடுகளில் பரவியுள்ளனர்.
மாநில அதிபர் அலுவலகத்தின் வாக்காளர் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் குடிமக்கள் கூட்டாட்சி வாக்குகள் மற்றும் ஏனைய தேர்தல்களில் வாக்களிக்கலாம்.
பதிவுசெய்யப்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் 65 வயதுக்குட்பட்டவர்கள்.
2010 மற்றும் 2025 க்கு இடையில், கூட்டாட்சி வாக்குகளில் பங்கேற்பு 41% இலிருந்து 20% ஆகக் குறைந்தது. 2,000 முதல் 3,000 பேர் வரை தபால் மூலம் வாக்களித்தனர்.
2011 இல் நாடாளுமன்றத் தேர்தலில் 31% பேர் பங்கேற்றனர்; 2023 இல் வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட சுவிஸ் மக்களில் 17% ஆக இருந்தது.
மூலம்- swissinfo

