0.2 C
New York
Monday, March 2, 2026

அகழ்வில் ஈடுபட்டவர் மண்ணில் புதைந்து மரணம்!

குஷெல்முத்தில் அகழ்வுப் பணியின் போது ஒருவர் புதையுண்டு மரணமானார் என ஃப்ரீபர்க் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை, மாலை 4:30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

55 வயதுடைய ஒருவர் தண்ணீர் குழாயை சரிசெய்ய சுமார் இரண்டு மீட்டர் ஆழத்தில் அகழ்வு இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டிக் கொண்டிருந்த போது, ​​இமண் சரிந்து அவரை புதைத்ததாக கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விரைவான உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நபர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துள்ளார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles