சுற்றுலாத் தீவான பாலியில் இந்து மதப் பண்டிகையை இழிவுபடுத்தும் வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் சுற்றுலாப் பயணி ஒருவர், இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வயது அறியப்படாத அந்த சுவிஸ் நாட்டவருக்கு, வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டுகளின் பேரில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பாலி காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாலியின் மௌன நாள் அல்லது “நியேபி” கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தத் தீவில், உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் சுயசிந்தனைக்காக 24 மணி நேரம் வீட்டிலேயே இருக்க வேண்டும். வேலை, பயணம், பொழுதுபோக்கு மற்றும் மின்சாரப் பயன்பாடு கூட தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மதப் பண்டிகையைக் குறிப்பிடும்போது, இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் மீண்டும் மீண்டும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட சுவிஸ் நாட்டவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மூலம்- swissinfo

